பிரதான செய்திகள்

5 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபானத்துடன் ஒருவர் கைது

அதிக விலை கொண்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15431 ஷெம்பேன் மற்றும் வைன் போத்தல்களுடன் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுமார் 5 கோடி பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 3, ஆர்.ஏ. த மெல் மாவத்தையை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment