ஐ.தே.கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை வழங்கி அதி கூடிய பாதுகாப்புகளை வழங்கவும், ஜனாதிபதியின் தரப்பு முஸ்லீம் தலைவர்கள் அவரிடம் இந்த விடயங்கள் தொடர்பில் உரையாடி அவசரமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒழுங்குகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் ஜனாதிபதி, ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசீம், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர் பெளஸி போன்ற அரசியல் தலைவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திய தேசிய காங்கிரஸ் தலைவர் இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இது அரசியல் பேசுகின்ற நேரமல்ல, உடனடியாக குறித்த ஊர்களை சேர்ந்த தலைவர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள், என அணைவரும் ஒண்றினைந்து நிதானமா காத்திரமான முடிவுகளை பெற்று சூழ் நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் மக்களை வழி நடாத்துமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம் அதாஉல்லா வேண்டுகோள் விடுத்தார்.

0 comments:
Post a Comment