பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக ஷரீப் நியமனம்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக  எம்.சீ.எம்.ஷரீப்  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று  (15)   வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் செயலாளராகவும், பிரதிப்பிரதம செயலாளர்  (ஆளணி மற்றும் பயிற்சி) கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.

கிழக்கில் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் கூட்டுறவு துறையின் மூலம் மக்களுக்கு  சிறந்த சேவைகளை வழங்கி மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் புத்துயிர் படுத்தும் நோக்கிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன  கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அசங்க அபேகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment