பிரதான செய்திகள்

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல் சார்பில் சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

- யூ.கே.காலித்தீன் -

எதிர்வரும்  உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை தீர்மானித்ததற்கமைவாக, இன்று (08) கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான இரண்டு சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், மாளிகைக்காடு சைத் இப்னு தாபித் பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் காரைதீவு பிரதேச சபைக்கும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.

கல்முனை மாநகரசபைக்காக போட்டியிடும் கட்சிகள், சுயேற்சைக்குளுக்களுக்கான வரிசையில் கட்டப்பட்ட முதலாவது கட்டுப்பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment