பிரதான செய்திகள்

ஹனீபா மதனியினால் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(றிசாத் ஏ காதர்)

மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ம் வட்டாரத்தின் மஜீட் வீதியும், 3ம் வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குன்றுங்குளியுமாகத் தோற்றமளித்து, போக்குவரத்துக்கு பொருத்தமற்றுக்கிடந்த இவ்வீதிகளின் புனர் நிர்மாணப்பணிக்குத் தேவையான நிதியினை அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம் ஹனீபா மதனி மேற்கொண்டிருந்தார். 

அதன் பலனாக கிடைக்கப்பெற்ற நிதியினைக் கொண்டு  இவ்வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

குறித்த வீதி நிர்மாணப் பணிக்கு நிதியினை பெற்று புனரமைக்க உதவியதுக்கு இப்பகுதிவாழ் மக்கள் அஷ்ஷேஹ் ஹனீபா மதனிக்கு நன்றியையும், பாராட்டினையும் தெரிவிக்கின்றனர். 

மேற்படி நிகழ்வில் அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment