பிரதான செய்திகள்

கிண்ணியாவில் கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்து

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் இரவிலும் பகல் நேரங்களிலும் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா புஹாரி சந்தி தொடக்கம் டீ சந்தி மட்டக்களப்பு பிரதான வீதி உட்பட உள்வீதிகளிலும் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வீதிகளை மலம் கழித்து நாசமாக்கப்படுவதும் இரவு நேரங்களில் போதிய மின்வெளிச்சமின்மையாலும் வீதி விபத்துக்கள் மாடுகளுடன் மோதுண்டு நடைபெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வீதி விபத்துக்கள் உட்பட பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா நகர சபையினால் அண்மையில் இவ்விடயம் தொடர்பில் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் எனும் அறிவித்தல் ஊடகங்களில் விடுக்கப்பட்டும் உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தும் இது வரைக்கும் நடவடிக்கைகளுக்கு தீர்வின்மையால் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

எனவே கிண்ணியா நகர சபை இவ்விடயம் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு கட்டாக்காளி மாடுகளை வீதியோரங்களில் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment