பிரதான செய்திகள்

இலங்கையில் மலேஷிய பிரதமர்: புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்­கேற்கும் பொது­ந­ல­வாய மாநாட்டின் பங்­கேற்பு நாடு­களில் மலே­சிய தலை­மைத்­துவம் தொடர்­பாக ஆராயும் நோக்­கி­லேயே இவ­ரது இவ்­வி­ஜயம் அமைந்­துள்­ளது.

இவ்­வி­ஜ­யத்தின் பொழுது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளிவி­வ­கார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment