பிரதான செய்திகள்

கீதா எம்.பியாக இருக்க முடியாது

கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. 

இன்று (02) குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்தநிலையில், இரட்டைக் குடியுறிமையுடன் கீதா இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, உயர்நீதிமன்றமும் தனது தீர்பில் குறிப்பிட்டுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment