பிரதான செய்திகள்

மத்தியமுகாம் பிரதேசத்தில் விளையாட்டுப் போட்டியும் கௌரவிப்பு நிகழ்வும்

(எம்.எம்.ஜபீர்)

மத்தியமுகாம் சாளம்பைக்கேணி-04 மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.அம்ஜாத் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், அமீர் அலி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.வீ.நபாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுக்களின் ஆலோசகர் மீரார் ஹாஜியார், ஊடகவியலாளர் எம்.முஸ்தபா,  பள்ளிவாசல் பிரதிநிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இக்கிராமத்தில் முதல்முறையாக இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து  கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின்  பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவன் எச்.றிபாத் அஹம்மட் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் 164 புள்ளியை பெற்று சித்தியடைந்த மாணவி எப்.பாத்திமா சனா ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment