நவீனரக வாகனம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்ட நபர் வாகனத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் வசிக் கும் பெண் ஒருவர் தனது சுமார் நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு முன் னர் மாதமொன்றுக்கு தொண்ணுராயிரம் ரூபா வாடகை ஒப்பந்தத்துடன் வழங்கியுள்ளார்.
முதல் மாதம் தனக்கு பொருந்திய பிரகாரம் மாத வாடகை வழங்கப்படாததால் குறித்த பெண் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதிலும் அவரோடு தொடர்பு கொள்ள முடியாது போயுள்ளது. இதனையடுத்து அப்பெண் தனது கணவருடன் அந்நபரைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு அந்நபர் குடியிருந்த வாடகை வீடும் பூட்டப்பட்டிருந்ததால் இது தொடர்பில் ராகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் போதே குறித்த நபர் பற்றிய தகவல்கள் தெரிய வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தொடர்பில் தேடிப்பார்த்த போது அவர் பல கோடி ரூபா பெறுமதி யான நவீன ரக வாகனங்கள் பலவற்றை மாத வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு அவ்வாகனத்துடன் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அந்த வாகனங் களின் உரிமையாளர்களும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த நபர் கந்தானை பிர தேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளருக்கு வீட்டு வாடகையை வழங்காமல் அவ்வீட்டிலிருந்து சென்றுள்ளமை தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித் தனர்.

0 comments:
Post a Comment