சம்மாந்துறைக் கல்வி வலய அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளுக்கு ரூபா. 43,135,287.14 (நான்கு கோடி 31 இலட்சத்து 35 ஆயிரத்து 287 ரூபா 14 சதம்) தேவை என சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதம கணக்காளர் கேந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியர் சேவை உள்ளீர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகளின் போது சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளது.
இந்நிலுவைக் கொடுப்பனவைக் கோரி தினமும் ஆசிரியர்கள் வலயக் கல்வி அலுவலகம் வருகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக சம்பள நிலுவைகள் தயாரிக்கப்பட்டு அதனை வழங்குவதற்கான கட்டு நிதியாக ரூபா. 43,135,287.14 வழங்குமாறு மாகாணக் கல்விப் பணிமனை ஊடாக, மாகாண திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.
இந்நிதி கிடைக்கப்பெற்றதும் சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் கடமையாற்றும் சகல அதிபர், ஆசிரியர்களின் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும் எனவும் கணக்காளர் கேந்திரமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment