பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் வீதி திறப்பு விழாவும், பொதுக்கூட்டமும்: பெருந்திரலானோர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)


காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சம்மாந்துறை அலவக்கரை வீதி நேற்று (13) மாலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன, பொத்துவில் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை, உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அமைப்பாளர் ஹசன் அலியின் கோரிக்கைக்கமைய குறித்த வீதியினை நிர்மாணிப்பதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல 25மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை நேற்றைய தினம் சம்மாந்துறை MPCS வளாகத்தில் ஐ.தே.கட்சியின் பொதுக்கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதன்போதும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். 

இக்கூட்டத்தில் பெருந்திரலான மக்கள் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment