பிரதான செய்திகள்

நீதித்துறையை நம்பியுள்ள அம்பாறை அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள்...!



மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு முன்மொழிவுத்திட்டத்திற்கமைவாக நாட்டில் உள்ள அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் சலுகை அடிப்படையில் (50000ரூபா) மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன.

அனுராதபுரத்தில் தொடங்கிய ஆரம்பம் அதனைத் தொடர்ந்து மாத்தளை பொலநறுவை எனத் தொடங்கி நாட்டின் அம்பாறை  மாவட்டத்தைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டத்திலும் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையும் அம்பாறை  மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமையினால் அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் மிகுந்த மனவேதனையுடனும் கவலையுடனும் இருக்கின்றனர்.

இவை வழங்கப்படுமா? என்பதில்  அரச உத்தியோகத்தர்களிடையே சந்தேகம் அவர்களது உள்ளத்தில் இருந்தது. ஆனால் இன்று அந்த சந்தேகமும் அவர்கள் மனதை விட்டு மறைந்து விட்டது.

ஏனைய மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள்; அம்பாறை  மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படாமைக்கு யார்தான் காரணம்  அரச நிருவாகத்துறையில் இருந்த அரச அதிகாரிகளா  அல்லது அரசியல்வாதிகளா…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட பாதிக்கப்பட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை ஏன் வழங்கப்படவில்லை என்று அம்பாறை  மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள்  தமது ஆதங்கங்களை மனதுக்குள்ளேயே கொட்டித்தீர்ப்பதனை அவர்களின் பேச்சுக்களில் இருந்து அவதானிக்க முடிகிறது. 24 மாவட்டங்களில் வழங்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளுக்கு அம்பாறை மாவட்ட வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள் மட்டும் விதிவிலக்கா?

அம்பாறை  மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக இது வழங்கப்பட  அனைத்து நடவடிக்கையும்  எடுக்க வேண்டும் என  அம்பாறை மாவட்ட அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் அம்பாறை மாவட்ட அமைச்சர்கள்;;;; மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றில்
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

அம்பாறை  மாவட்ட சிங்கள, முஸ்லிம், தமிழ் சமூக அமைச்சர்மார்களே ……  பாராளுமன்ற உறுப்பினர்களே……..எங்கள் அஞ்சல் வாக்குகள் உங்களுக்கு உதவியது போல்    நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய ஏன் இதை எங்களுக்கு பெற்றுத்தர முடியாது    இது உங்களின் கவனத்திற்கு..
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment