பிரதான செய்திகள்

ஏறாவூர் அல் - அமான் வித்தியாலயத்தில் முப்பெருவிழா: பிரதம அதிதியாக அமைச்சர் சுபையிர் பங்கேற்பு

ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் முப்பெருவிழா இன்று (19) பாடசாலை அதிபர் யூ.எல். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ். சுபையிரின் 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களும் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ். சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

இதன்போது . இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment