கிழக்கு மாகாணம் பூராகவும் நாளை (15) வெள்ளிக்கிழமை கடையடைப்பும், கண்டனமும் மேற்கொள்வதற்கு ஒன்று திரளுமாறு கிழக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
20வது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன ஸ்ரீ.ல மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம் ஒன்றுபடுங்கள் எனும் கோசத்துடன், இந்த கடையடைப்பு மற்றும் கண்டன நடவடிக்கைக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நமதே அமைப்பு, இந்த கடையடைப்பு மற்றும் கண்டனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment