பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபையினர் தெளிவின்மையால் 20ஐ ஆதரித்திருக்கக்கூடும்

திருத்தங்களுடன் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள்  எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்...

20 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அண்மையில், கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு தெளிவின்மையினால் தமது ஆதரவை தெரிவித்திருக்கக்கூடும். அதைப்பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. தற்போது இருக்கும் நிலையில், எமக்குத் தரப்பட்டது முன்னைய ஆவணம் மட்டுமே புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment