பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


(எம்.எம்.ஜபீர்)
புனித மக்காவில் நாடு, நிறம் மற்றும் பேதங்களை மறந்து இஸ்லாமியர்  என்ற ஒரே கொள்கையுடன் இறைவனுக்காக இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி நமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள இன்றைய நன்னாளில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாகவும், ஐக்கியத்துடன் சகோதரத்துவ வாஞ்சையுடன் ஒரு முன்மாதிரியான சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், 

இத்தகைய சந்தர்ப்பத்தில், நபி இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவு கூரும் இவ்வேளையில் முஸ்லிம்கள் தங்களது தியாக உணர்வையும், ஈமானிய உணர்வையும் மேலும் மெருகூட்டுவதுடன்,  சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறன. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார சூழலில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றடுப்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட இப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுவதுடன். இந்த இனிய பெருநாள் தினத்தில் மியன்மாரில்  கொடூரத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் எமது சகோதர முஸ்லிங்களுக்களுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து   பிரத்திப்போம்.

இன்றைய ஈகைத் திரு நாளில் முஸ்லிம்கள் அனைவரும் இத்தகைய உயர் பண்புகளைப் பேணி, ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும்  இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment