பிரதான செய்திகள்

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பரிஸில்

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பிரான்ஸின் பரிஸ் நகரம் பெற்றுள்ளது. பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக்குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹம்பர்க் (ஜேர்மனி), ரோம் (இத்தாலி), பரிஸ் (பிரான்ஸ்), புடாபெஸ்ட் (ஹங்கேரி) உள்ளிட்ட நகரங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. 

ஆனால், நிதி பிரச்னை காரணமாக பாரிசைத் தவிர மற்ற நகரங்கள் ஒலிம்பிக் நடத்தும் போட்டியிலிருந்து விலகின. இதனால், 2024ஆம் ஆண்டு பரிஸில் ஒலிம்பிக் அரங்கேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், 2028ஆம் ஆண்டில் போட்டியை நடத்த அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment