பிரதான செய்திகள்

தூய அரசியலுக்காக விசேட கலந்துரையாடல்

இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபற்றுதலை இளைஞர்களின் மேம்படுத்துவதற்கான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு தனியார் விடுதியில் இடம்பெற்றது.   


இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப்பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல், சம்பந்தமான கருத்துரைகளும்  முன்வைக்கப்பட்டதுடன்,  இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது

இன்றைய தூய அரசியலுக்காக என்ற நிகழ்ச்சி திட்டம் என்னும் விளக்க உரையை எஸ்.கோபிகாந்த் மற்றும்  நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் புதிய கருத்துரையை எஸ்.சொர்ணலிங்கமும்  அரசியலில் பெண்கள் பற்றிய விளக்க உரையை மார்ச் 12 இயக்கத்தின் திட்ட முகாமையாளர் ருக்ஷி பெர்னாண்டோ ஆகியோர் நிகழ்த்தினர். இந்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment