பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் பிரதேச வட்டாரக் குழுக்களின் ஒன்றுகூடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் பிரதேச வட்டாரக் குழுக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (7) பூமாச்சோலை, காயங்குடா பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் மத்திய குழுவின் பிரதித் தலைவர் எம்.எஸ்.ஏ.கபூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைர் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் உரையாற்றினார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 14 வட்டாரங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் 400பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது உலமாக்கள், கல்விமான்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்கள், மசூறாக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment