குறித்த பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்குறிய இரண்டாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (15) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செலியன் தலைமையில் பதியத்தலாவையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான விமலவீர திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங்க பதியத்தலாவ பிரதேசத்தில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment