பிரதான செய்திகள்

2022 இல் கட்டாரில் உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டி

உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டியில் கால்பந்தும் ஒன்றாகும்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியுடன் ரஷ்யாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு கட்டார் நாட்டில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலக கிண்ண கால்பந்தை ஃபிபா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைக்க அதனை கட்டார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், உலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தியதும், அடுத்த உலக கிண்ணத்திற்கான பொறுப்புகளை கட்டாரிடம் ஒப்படைத்த அனுபவம் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment