பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் அறுவடை விழா

அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட கத்தரி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகியன அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று (4) இடம்பெற்றது.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அட்டாளைசை்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.எம்.ஹபிறு றகுமான் உட்பட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு அறுவடை மேற்கொண்டனர்.

இரசாயனங்களும், பீடைநாசினிகளும் பயன்படுத்தாமல் நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கமும், விவசாய திணைக்களமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மேற்படி கருத்திட்டத்திற்கமைவாகவே அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் அதன் ஊழியர்களினால் தக்காளி, கத்தரி, மிளகாய் என்பன பயிரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment