பிரதான செய்திகள்

IOC பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்க, இலங்கையின் இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை ரூபா 9 இனாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையை அதனால் ரூபா 5 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெற்றோல் (ஒக்டேன் 92) லீட்டர் ஒன்றின் விலை ரூபா 126 ஆகவும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை ரூபா 100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment