பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் கௌரவிப்பு விழா

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற மற்றும் இடமாற்றலாகி சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (25) ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது 2015 ஆம் தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களான பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.முஸ்தபா, முகாமைத்துவ உதவியாளர்களான திருமதி எம்.ரீ.யூ.பஜிரியா, திருமதி எப்.ஏ.அமீர், திருமதி எம்.மணிச்சந்திரன், திருமதி ஏ.எல்.உம்மு பாயிதா, கே.மகேந்திரராசா, திருமதி எம்.சுல்பா, நூலகர்களான திருமதி எஸ்.எப்.றிஹானா ஹாலித், ரீ.கோபாலசிங்கம், ஏ.எல்.எம்.முஸ்தாக், தொழில் நுட்ப உத்தியோகத்தர் ரீ.எல்.எம்.றசீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றமீஸ், வருமான பரிசோதகர் எஸ்.எச்.ஏ.எஹியா ஆகியோர்களும், ஒய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான எம்.எல்.றசூல், ஏ.அயாத்து முஹம்மட், எஸ்.கந்தசாமி, ஏ.நடேசப்பிள்ளை, ஐ.எல்.எம்.முஹம்மட் தம்பி, ஐ.எல்.எம்.முஸ்தபா, கே.அறுமுகம், ஏ.ஏ.ரஹீம் ஆகியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளருமான எஸ்.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கிதிர் முஹம்மட், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையில் 06 வருடங்கள் கடமையாற்றி நிந்தவூர் பிரதேச சபைக்கு இடம்மாற்றம் பெற்று சென்ற ஏ.ஏ.சலீம் பொது மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றியமைக்காக விஷேடமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment