பிரதான செய்திகள்

ஐம்பத்தாராயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாதவர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்)                  

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐம்பத்தாராயிரம்  ரூபாய்  தாபரிப்பு பணத்தினை  செலுத்தாது தலைமரைவாக இருந்த நபரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (27) உத்தரவிட்டார்.           

திருகோணமலை,ஆனந்தபுரி,பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                       

குறித்த சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் ஏழாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் எட்டு மாதங்களாக ஐம்பத்தாராயிரம் ரூபாய்யினை  தாபரிப்பு பணத்தினை  செலுத்தாது தலைமரைவாக இருந்த நிலையிலே மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய செவ்வாய்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                               

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment