பிரதான செய்திகள்

யாழில் எரிபொருள் விநியோகிக்கத் தடை

யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள டீசலில் நீர் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

 எனவே இதுதொடர்பிலான ஆய்வு பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை இந்த எரிபொருள் நிலையத்தின் எரிபொருள் விநி​யோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற டிரக்டர் வண்டியொன்று பழுதடைந்தமையடுத்தே குறித்த எரிபொருள் நிலையம் தொடர்பில் மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன்,இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் மற்றும் பணியாளர்களுடன் பிரதேசமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

எனினும் கடந்த சில நாட்களாக வடக்கில் பெய்துவரும் மழையினால் நிலக்கீழ் எரிபொருள் தாங்கியில் நீர் கலந்திருக்கலாம் என இதன் முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment