ஒலுவில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் இன்று (07) அதிகாலை காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற போது குறித்த படகு கவிழந்ததில், ஒலுவில் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment