(எப்.முபாரக்)
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொல்லால் தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் நேற்று (3) உத்தரவிட்டார்.
பற்றிமா வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீதியால் செல்லும் போது சந்தேக நபருக்கும் மற்றொருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது பின்பு அதனை காரணமாக வைத்து சந்தேக நபர் பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை சனிக்கிழமை (2) கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயங்களுக்குள்ளான 27 வயதுடையவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

0 comments:
Post a Comment