எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இன்று (9) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சபையில் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து, உத்தேச வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது.
உத்தேச வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்று கட்ட வாக்கெடுப்பின் இறுதி வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் நடைபெற்றது.
இதில், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, குறித்த திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

0 comments:
Post a Comment