பிரதான செய்திகள்

”சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா” விற்பனைக் கண்காட்சி

சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழாவும், மாவட்ட மட்டத்திலான விற்பனைக் கண்காட்சியும் வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (6) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமட்ண விதானபத்திரனவின்  தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் கே.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் க. உதயராசா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் உட்பட  வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபர் நாடா வெட்டி விற்பனை கண்காட்சி நிலையத்தினை திறந்து வைத்ததுடன் விற்பனை நிலையங்களையும் பார்வையிட்டார். விற்பனை கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறுமென சமூர்த்தி வங்கியின் பணிப்பாளர் தெரிவித்தார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment