பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனையில் சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு விழா

(ஏ.எல்.றியாஸ்)

அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு விழா இன்று (14) அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

அக்கரைப்பற்று வலய ஆரம்ப பிரிவு SSDP இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வு அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட்லெப்பை பிரதம அதிதியாகவும், ஆரம்ப பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபுதாஹிர் விசேட அதிதியாகவும், கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டி நிகழ்ச்சிகளின் போது நடுவர்களாக அட்டாளைச்சேனை நடுவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment