பிரதான செய்திகள்

சக வீரருடன் மோதிக்கொண்டதில் இந்தோனேசிய கோல்கீப்பர் மரணம்

சக வீரருடன் ஆட்டத்தின் போது மோதிக்கொண்டதில் இந்தோனேசிய கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா பலியானார். இவருக்கு வயது 38. இத்தகவலை அவரது கிளப் பெர்செலா லமோங்கன் உறுதி செய்தது.

இந்தோனேசியா கால்பந்து லீக் போட்டியில் செமன் படாங் அணிக்கு எதிராக பெர்செலா அணி விளையாடியது. இதில் தன் அணி வீரர் ரேமன் ரோட்ரிக்ஸுடன் கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா மோதிக்கொண்டதில் மைதானத்தில் நிலைகுலைந்து சாய்ந்தார்.

உடனடியாக ஹூடாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சொய்ருல் ஹூடா மரணமடைந்தார்.

மருத்துவ அறிக்கையில், நேரடியாக மோதிக்கொண்டதில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கிளப்புக்காக நீண்ட காலம் ஆடியவர் ஹூடா என்பதால் கிளப் வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment