பிரதான செய்திகள்

சென்னை துறைமுகத்தில் ரூ.3.2 கோடி மதிப்புள்ள 8 டன் செம்மரம் பறிமுதல்

மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ரூ. 3.2 கோடி மதிப்பு மதிப்புள்ள 8.1 டன் செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

வருவாய் புலனாய்வு பிரிவு சென்னை அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து சென்னை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில கண்டெய்னர்களில் 10 மரப்பெட்டிகள் இருந்தன. அவற்றில் ஏற்றுமதி துணிகள், கிரானைட் சிலாப்புகள் என்று எழுதியிருந்தது. அவைகளை திறந்து சோதனை நடத்தியபோது அதனுள்ளே 3.1 டன் செம்மரக் கட்டை இருந்தது தெரியவந்தது.

ஏற்றுமதி துணிகள் என்று பொய்யான லேபிளில் கண்டெய்னர் குடோனையும் கடந்து துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் மலேசியா செல்லவிருந்த நேரத்தில் இவைகள் பிடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மரங்களை கடத்தியவர்கள் யார் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை மொத்தமாக ரூ.31.5 கோடி மதிப்புள்ள 80 டன் செம்மரக் கட்டைகள் பிடிபட்டுள்ளன. இதில் கடந்த மாதம் மட்டுமே 30.9 டன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment