பிரதான செய்திகள்

கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல்

(எஸ்.அஷ்ரப்கான்)

கம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (28) யக்கல லின்றோஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

மல்வானை அல்- முஹ்ஸீன் நிறுவனத்தின் அனுசரனை ஏற்பாட்டில் அமைப்பின் ஸ்தாபகர் தொழிலதிபர் அல்-ஹாஜ் எம்.எம்.ஏ. இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  விசேட பேச்சாளராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ரீ.ஏ. நிஸாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் எம்.ஆர்.எம். றிஸ்வி அவர்களும் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மட், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்-ஹாஜ் எம்.எம்.ஏ. கபூர் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  எம்.ஏ.எம். ஹூனைஸ் உட்பட கல்வித்துறையின் உயர் அதிகாரிகளும் அல்-முஹ்ஸீன் நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர்களும் மற்றும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். 

அல்-முஹ்ஸீன் நிறுவனத்தின் அமைப்பாளர் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம்.ஸாபிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் \ கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் உள்ள சவால்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற, நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இலங்கையின் கல்வித்துறை மற்றும் முஸ்லிம்களின் கல்வித்துறைச் சவால்கள் தொடர்பிலும் மிக ஆழமான கருத்துக்களை இதன்போது அவர் முன்வைத்தார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment