பிரதான செய்திகள்

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட ஆகிய இருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டனை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட  ஆகிய இருவரினதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு உச்ச நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை சில் துணி கொள்வனவிற்காக பயன்படுத்திய மோசடி வழக்கு இன்று கொழும்பு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பண மோசடி வழக்கு விசாரணையில் சாட்சியங்களும் ஆதாரங்களும் லலித் வீரதுங்கவும் அனுஷ பெல்பிடவும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே இருவருக்கும் தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறை தண்டனையுடன் தலா 20 லட்சம் அபாரதமும் விதித்துள்ளது.

மேலும் இருவரும் தலா 50 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment