பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

 (அய்ஷத்)

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (31) இணைத்தலைவர்களான பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 10மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும், அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாலை 3மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment