பிரதான செய்திகள்

நல்லிணக்கம், ஒற்றுமை, தியாக சிந்தையுடன் செயலாற்ற இத்திருநாளில் உறுதிபூணுவோம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்



ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு விசேட துஆக்களை செய்யுமாறு  பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் 

நாட்டின் நிலையான சமதானம் நீடிக்கவும், சிறுபான்மை சமூகம் பிரச்சினைகளின்றி தமக்கான உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கும் இத்திருநாளில் பிரார்த்திக்க வேண்டும் என தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,முஸ்லிம்கள் ஒற்றுமைகயாக- புரிந்துணர்வுடன் – தியாக சிந்தையுடன் செயலாற்ற இத்த நன்நாளில் உறுதிபூண வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, “உள்நாட்டிலும் – வெளிநாட்டிலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் எம்மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். இத்திருநாளில் பாலஸ்தீன, மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்காகவும் நாங்கள் விசேட துஆக்களில் ஈடுபடவேண்டும். சகோதர முஸ்லிம்கள் மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் வேளையில் நாங்கள் இங்கு சந்தோஷமாக இருக்காமல் அம்மக்களது துன்பத்தில் பங்கு கொள்ளும் வகையில் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்” என்றார்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள்.

நல்லாட்சி சகல இன மக்களும் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. விசேடமாக தமிழ், முஸ்லிம்மக்கள் தமது உரிமைகளை அரசியல் ரீதியாக பெற்றுக் கொள்வதற்கான அரசியல் சூழல் தற்போது நாட்டில் உருவாகியுள்ளது.

முஸ்லிம்கள் ஒற்றுமையாக – புரிந்துணர்வுடன் – தியாக சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதி பூணுவோம். எம்மிடையே ஒற்றுமை ஏற்படும் பட்சத்திலே எமக்கு எதிரான சவால்களை வெற்றி கொள்ள முடியும். இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்;க்கம். அதன் அடிப்படையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள நாங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மீண்டும் சிங்கள தேசிய வாதம் தலைதூக்க முயற்சி செய்கின்றது. இந்நிலையில், உழ்ஹிய்யா கடமையினை நிறைவேற்றும் முஸ்லிம்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment