பிரதான செய்திகள்

லலித் - அனுஷ ஆகிய இருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் செய­லாளர் லலித் சந்­திர குமார் வீர­துங்க, தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நிஷான் பெல்­பிட்ட கோர­ளகே அனுஷ பெல்­பிட்ட ஆகிய  இரு­வ­ரும் இன்று காலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் மூன்று வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று தீர்­ப்ப­ளித்­தது. சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய குறித்த இருவரும் நீரிழிவு நோய் நிலைமையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபாவை பயன்­ப­டுத்தி நாட­ளா­விய ரீதியில் விகா­ரை­க­ளுக்கு பௌத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற ஆடை­க­ளுக்­கான துணி­யினை (சீல் துணி) விநி­யோ­கித்­தமை தொடர்பில் சட்­டமா அதி­ப­ரினால் 3 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­ட­தை­ய­டுத்தே இவ்­வாறு தீர்­ப­ளிக்­கப்­பட்­டது. 

கொழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி திஹான் குல­துங்க இந்த தீர்ப்பை வழங்­கினார். கடூ­ழிய சிறைத்­தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக தலா 20 இலட்சம் ரூபாவை அப­ராதம் செலுத்­தவும் தலா 500 இலட்சம் ரூபாவை தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு நட்­ட­ஈ­டாக வழங்­கவும் இதன் போது நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

நட்­ட­ஈட்டு தொகை­யினை எதிர்­வரும் செப்­டெம்பர் 20 ஆம் திக­திக்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் நீதி­பதி தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment