பிரதான செய்திகள்

சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

(றியாஸ் ஆதம்)

அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட (kids Athletic) சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையில் அக்கோட்டப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை (kids Athletic) தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த பயிற்சி செயலமர்வுவொன்று சனிக்கிழமை (24) அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில்  இடம்பெற்றது. இதன்போது அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை (kids Athletic) இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ், ஆசிரியர்களான ஏ.எல்.அஜ்மல், ஜே.பஸ்மிர் ஆகியோர் பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டத்தில் உள்ள 15பாடசாலைகளில் இருந்தும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment