பிரதான செய்திகள்

அல் - மிஸ்பாஹ் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாவட்ட மட்ட சதுரங்க போட்டி சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கே.சிவனேசன் தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஜே. எம்.ஸஹ்மி,எம்.இல்ஹாம், பி.எம்.எப் .நுஹா ,எப்.ஷிபா, எப்.இல்மா, ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகினர்.

குறித்த மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.ஜே.முபீத் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ அப்துல் ரசாக் , பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 290 மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment